அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி துவக்கம்
ஈரோடு, நவ. 27-
நீட் தேர்வுக்கான பயிற்சி, ஈரோடு மாவட்டத்தில், 16 மையங்களில் நேற்று துவங்கியது.
அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர், தங்களை தயார் செய்து கொள்ளும் விதமாக, ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வுக்கான பயிற்சி நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 16 மையத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா, 50 பேருக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர் சீருடையுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நீட் தேர்வுக்கான பயிற்சி, ஈரோடு மாவட்டத்தில், 16 மையங்களில் நேற்று துவங்கியது.
அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர், தங்களை தயார் செய்து கொள்ளும் விதமாக, ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வுக்கான பயிற்சி நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 16 மையத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா, 50 பேருக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர் சீருடையுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!