Advertisement

கஞ்சா விற்ற எஸ்.ஐ., மகன்உட்பட 3 பேர் கைது

நாகர்கோவில்:நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்றதாக எஸ்.எஸ்.ஐ., மகன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி பிரேம்நகரை சேர்ந்தவர் எஸ்.எஸ்.ஐ., முத்துமாரியப்பன். மகன் கவுதம் 19. ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவகல்லுாரி ரோட்டில் நின்று கொண்டிருந்த இவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வடசேரி அருகே புத்தேரி மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த மதுசூதனபெருமாள் 18, மற்றும் 17 வயது சிறுடனிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கங்சா சப்ளை செய்த பணக்குடி அண்ணாநகரை சேர்ந்த தினேைஷ 22, தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement