Advertisement

பைக் மீது கார் மோதல் தலைமை காவலர் பலி

ADVERTISEMENT
செய்யூர்:செய்யூர் அருகே, நயினார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு, 42; வண்டலுார் அருகே, ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியில் தலைமை காவலராக பணிபுரிந்தார்.
வீட்டிலிருந்து கடப்பாக்கத்திற்கு, கிழக்கு கடற்கரை சாலையில், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில், நேற்று சென்றார்.பனையூர் அருகே, அதிவேகமாக வந்த 'மஹேந்திரா சைலோ கார்' இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் அன்பு துாக்கி வீசப்பட்டார்.சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். உடலை மீட்டு, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement