பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு 7,000 கன அடி தண்ணீர் வரத்து
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 6,206 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 6,175 கன அடியாக
இருந்தது.
கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 7,673 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.11 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மதியம், 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 389 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 269 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.72 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்
பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 220 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.20 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!