ADVERTISEMENT
சென்னை : 'தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீது, நாளை (23ம் தேதி)யில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஜன., 1ல் இருந்து, இம்மாதம் 15ம் தேதி வரை, இரு சக்கர வாகன விபத்தில், 98 பேர் உயிரிழந்தனர். 841 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் 80 பேர்; பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள், 18 பேர்.எனவே, விபத்து குறைப்பு நடவடிக்கையாக, 23ல் இருந்து, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டு வோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீது, நட வடிக்கை தீவிரப்படுத்தப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!