துாத்துக்குடி மாவட்டம்,கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி முருகலட்சுமி, 36; திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார்.மே 4ல் தலைவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; மே 7ல் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். மீண்டும் மயங்கி விழுந்ததால், மே 8ல் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் மூளைச்சாவு அடைந்தார்.நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என புகார் எழுந்தது. நேற்று அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முருகலட்சுமியின் கணவர் சின்னதம்பி, ஹிந்து முன்னணி, கழுகுமலை ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார். ஹிந்து முன்னணி மாநில நிர்வாகிகள் நேற்று அரசு மருத்துவ மனையில் 'டீன்' ரவிச்சந்திரனுடன் பேச்சு நடத்தினர்.முருகலட்சுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது குறித்து,எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் தெரிந்தும், டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை.ஸ்கேன் முடிவுகளை பார்க்காமலேயே அவரை மே 7ல் டிஸ்சார்ஜ் செய்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து இருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும். மூளைச்சாவு அடைந்த பிறகும், அவரது உடலை தானம் அளிக்க, அரசு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என, கூறினர்.சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர். நேற்றுமுருகலட்சுமி உடலை பெற மறுத்து விட்டனர்.
வெட்கபடவெண்டிய விஷயம், நர்ஸ்கே இந்த அளவுக்கு டிரிட்மெண்ட் என்றால் மற்றவர் எம்மாத்திரம். கொரான சமயத்தில் இது மாதிறி negligencey கில்லிங் மிக நிறைய நடந்துள்ளது என்பது மிகவும் வருநத தக்கது .