படகில் ஓட்டை 11 பேர் மீட்பு
துாத்துக்குடி:படகில் ஓட்டை விழுந்ததால், கடலில் குதித்த 11 பேர் மீட்கப்பட்டனர். துாத்துக்குடி, திரேஸ்புரம் மீனவர்கள் 11 பேர், சங்கு குளிக்க நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனர்.
முயல் தீவு அருகே சங்கு குளித்து, மாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது கடலில் பலத்த காற்று வீசியது. மீனவர்கள் நிலைகுலைந்த போது, படகில் ஓட்டை விழுந்து, தண்ணீர் புகுந்தது. உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கடலில் குதித்தனர். தத்தளித்தவர்களை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டனர்.
முயல் தீவு அருகே சங்கு குளித்து, மாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது கடலில் பலத்த காற்று வீசியது. மீனவர்கள் நிலைகுலைந்த போது, படகில் ஓட்டை விழுந்து, தண்ணீர் புகுந்தது. உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கடலில் குதித்தனர். தத்தளித்தவர்களை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!