சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை பிரதோஷம் , அமாவாசை வழிபாட்டிற்காக இன்று முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் மாதம்தோறும் சதுரகிரி வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து, இன்று தை பிரதோஷம் ,ஜன. 31 ல் தை அமாவாசை வழிபாட்டிற்காக பிப். 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழு அளவில் கடைபிடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் மாதம்தோறும் சதுரகிரி வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து, இன்று தை பிரதோஷம் ,ஜன. 31 ல் தை அமாவாசை வழிபாட்டிற்காக பிப். 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழு அளவில் கடைபிடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!