அனுமதியின்றி மலை ஏறியவருக்கு அபராதம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், அனுமதியின்றி மலை ஏறியவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில், அனுமதியின்றி சிலர் செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் மலை ஏறும் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த வெற்றிவேல்ராஜன், 69, என்பவர் மலை உச்சி மீது அத்துமீறி, திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல் ராஜனுக்கு, வனத்துறையினர் மலை மீது ஏறிய குற்றத்திற்காக, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து விடுவித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி ஏறுவதும், திருவண்ணாமலை உள்வட்ட பாதைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதும் சட்டபடி குற்றம். இந்த தவறை செய்பவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, கடுமையான தண்டனை வழங்கப்படும்' என்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில், அனுமதியின்றி சிலர் செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் மலை ஏறும் பகுதியில் சோதனை நடத்தினர்.
வனத்துறையினர் கூறுகையில்,'அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி ஏறுவதும், திருவண்ணாமலை உள்வட்ட பாதைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதும் சட்டபடி குற்றம். இந்த தவறை செய்பவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, கடுமையான தண்டனை வழங்கப்படும்' என்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!