குடும்பத் தகராறு கணவர் தற்கொலை
திண்டிவனம் : மனைவி குடும்ப நடத்த வராததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து இறந்தார்.திண்டிவனம் காட்டுச்சிவிரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால், 37; இவரது மனைவி புவனேஸ்வரி, 33; குடிப்பழக்கம் உள்ள ஜெயபால், அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.இதனால், புவனேஸ்வரி கோபித்துக்கொண்டு, தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.கடந்த 15ம் தேதி புவனேஸ்வரியிடம் சென்று வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அவர் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஜெயபால், 19ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!