வலிப்பு நோய்: பெண் பலி
ஊத்துக்கோட்டை-ஒடிசா மாநிலம், நவ்பாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால்சிந்தா, 22. இவரது மனைவி குமாரிஊர்மிளா, 22. இவர்களுக்கு திருமணமாகி, இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. குடும்பத்துடன் எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். குமாரிஊர்மிளா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 15ம் தேதி குமாரிஊர்மிளாவிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!