ரூ. 3 லட்சம் டம்மி நோட்டு சிவகாசியில் ஐவர் கைது
சிவகாசி:கடனாக வாங்கிய ரூ. 3 லட்சத்துக்கு டம்மி நோட்டு கட்டுகள் வழங்கி ஏமாற்றிய ஐந்து பேர் சிவகாசியில் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி வேண்டுராயபுரம் மலையூரணி பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து 55. இவரிடம் திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த சீமைச்சாமி 52, தேனி காரிப்பட்டி சரவணன் 45, உசிலம்பட்டி சங்கர் 40, மதுரை தத்தனேரி மருது 33, உத்தமபாளையம் காளிராசன் 31, ரூ. 3 லட்சம் வாங்கியிருந்தனர்.
இவர்களிடம் காளிமுத்து பணத்தை கேட்டதற்கு கருப்பு மை தடவிய பாங்க் ஆப் இந்தியா என்ற பெயர் அச்சிட்ட டம்மி 500 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 6 கட்டுகளை கொடுத்து ஏமாற்றினர். திருத்தங்கல் போலீசார் 5 பேரையும் கைது செய்து, டம்மி ரூபாய் நோட்டுகள், காரை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி வேண்டுராயபுரம் மலையூரணி பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து 55. இவரிடம் திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த சீமைச்சாமி 52, தேனி காரிப்பட்டி சரவணன் 45, உசிலம்பட்டி சங்கர் 40, மதுரை தத்தனேரி மருது 33, உத்தமபாளையம் காளிராசன் 31, ரூ. 3 லட்சம் வாங்கியிருந்தனர்.
இவர்களிடம் காளிமுத்து பணத்தை கேட்டதற்கு கருப்பு மை தடவிய பாங்க் ஆப் இந்தியா என்ற பெயர் அச்சிட்ட டம்மி 500 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 6 கட்டுகளை கொடுத்து ஏமாற்றினர். திருத்தங்கல் போலீசார் 5 பேரையும் கைது செய்து, டம்மி ரூபாய் நோட்டுகள், காரை பறிமுதல் செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!