அரசு வேலை வாங்கித் தருவதாக மாணவியிடம் ரூ. 2.60 லட்சம் ரூபாய் மோசடி
புதுக்கோட்டை : அரசு வேலை வாங்கித் தருவதாக, கல்லுாரி மாணவியிடம், 2.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, வி.ஏ.ஓ., அலுவலக உதவியாளர் மீது அரிமளம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, தலையாத்திவயல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர், வனிதா, 35. கடந்த 2021ம் ஆண்டு, புதுக்கோட்டை, ராம்நகரில் குடியிருந்த இவர், அரசு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும் கணவர் மூலம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவருடன் நட்பாக பழகிய தனியார் கல்லுாரி மாணவி ஒருவரிடம், இரண்டு தவணைகளாக, 2.60 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.அரசு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியதால், ஏமாற்றபட்டதை உணர்ந்த மாணவி, அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்படி, அரிமளம் போலீசார், நேற்று வழக்குப்பதிவு செய்து, கிராம உதவியாளர் வனிதாவிடம் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, தலையாத்திவயல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர், வனிதா, 35. கடந்த 2021ம் ஆண்டு, புதுக்கோட்டை, ராம்நகரில் குடியிருந்த இவர், அரசு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும் கணவர் மூலம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவருடன் நட்பாக பழகிய தனியார் கல்லுாரி மாணவி ஒருவரிடம், இரண்டு தவணைகளாக, 2.60 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.அரசு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியதால், ஏமாற்றபட்டதை உணர்ந்த மாணவி, அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!