சிறுமியை கடத்தி திருமணம்: தி.பூண்டி வாலிபர் கைது
புதுக்கோட்டை: விராலிமலை அருகே, 17 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தவரை போலீசார போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடியைச் சேர்ந்த, 17 வயதுடைய சிறுமி, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள ஒரு தனியார் பஞ்சு மில்லில் வேலைபார்த்து வந்தார். இவரை கடந்த, 9ம் தேதி முதல் காணவில்லை என, அவரது தாயார் விராலிமலை போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அருள்பிரசாத், 24, என்பவருடன் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். சிறுமியை கடத்தி சென்ற அருள்பிரசாத்தை விசாரித்ததில், மொபைல்போன் ராங்கால் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, கடந்த, 10ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கீரனூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அருள்பிரசாத்தை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!