Advertisement

கவுரவ விரிவுரையாளர்கள் பிரச்னை முதல்வர் தீர்வுகாண வலியுறுத்தல்

மதுரை : 'மன உளைச்சலில் உள்ள கவுரவ விரிவுரை யாளர்களின் பிரச்னை களுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும்' என தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


@@அச்சங்க மாநில தலைவர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி விரிவுரையாளர் அரியலுாரை சேர்ந்த முருகானந்தம்,49, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ செலவிற்கு கூட வசதியில்லாமல் மரணத்தை தழுவியுள்ளார். 15 ஆண்டுகளாக பணியில் இருந்தும் அவரால் வீடு வாடகை கூட செலுத்த முடியவில்லை. யு.ஜி.சி., கோரும் அனைத்து தகுதிகளும் உள்ள கவுரவவிரிவுரையாளரின் நிலை தமிழகத்தில் இவ்வாறு தான் உள்ளது.

உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசுக் கல்லுாரிகளாக மாற்றப்பட்ட பல கல்லுாரிகளில் குறைந்தபட்ச சம்பளமான ரூ.20 ஆயிரம் சம்பளம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால் பல மாநிலங்களில் யு.ஜி.சி., நிர்ணயித்த மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது.
பல கல்லுாரிகளில் 5 மாதங்கள் சம்பளம் நிலுவையில் உள்ளது. அவர்களின் எதிர்காலவாழ்வாதாரம் கருதி பணி அனுபவம், கல்வித் தகுதி அடிப்படையில் நிரந்தர உதவி பேராசிரியராக நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement