இரிடியம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
சத்தியமங்கலம்; 'இரிடியம்' மோசடி வழக்கில், தலைமறைவான இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன். இவரது கார் டிரைவர் சுரேஷ், நண்பர் ஜாய். 'இரிடியம்' இருப்பதாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு, மூவரையும் வரவழைத்தனர். காரில் கடத்தி சென்ற கும்பல், அதே பகுதியில் தோட்டத்தில் அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியது. மோகனின் மனைவி, சத்தி போலீசில் புகாரளித்த நிலையில், அதே பகுதியில் இருந்த கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர். ஒன்பது பேரை கைது செய்தனர். தப்பிய ஆறு பேரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, புதுசூரங்குடி கிராமத்தை சேர்ந்த மணி, 56; இவர், போலீசாக பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். கோவை, தொண்டாமுத்தூரை சேர்ந்த டெய்லர் சிவா, 52, ஆகியோரை, கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!