பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் குறையுது நீர்மட்டம் -136 அடியை எட்டுவதில் சிக்கல்
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறப்பால் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. இதனால் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூன் 8-ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கூடுதலாக பெய்யாததால் நீர்மட்டம் உயருவதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக நீர்ப் பிடிப்பில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் 130 அடியை கடந்தது.
வைகை அணையில் நீர் இருப்பு முழுக் கொள்ளளவை எட்டியதால் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 105 கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர்.
ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் நீர்திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் 133.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 133.65 அடியாக குறைந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 742 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5551 மில்லியன் கன அடியாகும்.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்களில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கேரளாவில் ஜூன் 8-ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கூடுதலாக பெய்யாததால் நீர்மட்டம் உயருவதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக நீர்ப் பிடிப்பில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் 130 அடியை கடந்தது.
வைகை அணையில் நீர் இருப்பு முழுக் கொள்ளளவை எட்டியதால் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 105 கன அடி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர்.
ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் நீர்திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் 133.75 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 133.65 அடியாக குறைந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 742 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5551 மில்லியன் கன அடியாகும்.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்களில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!