ADVERTISEMENT
ஓசூர்:தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று தராமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீரை திறக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
இதற்காக, தமிழக எல்லையான ஓசூர், மூக்கண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம் நோக்கி, விவசாயிகள் நடைபயணம் புறப்பட்டனர்.
தமிழக அரசு, காவிரி நீரை பெற்று தராமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை எடுத்துக் காட்டும் வகையில், விவசாயிகள் அனைவரும் நெற்றியில் நாமம் போட்டு, தலையில் காலி மண்பானையுடன் பேரணி சென்றனர்.
ஓசூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் மண்பானைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.
சங்க மாநில தலைவர் வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், 15 பெண்கள் உட்பட 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்காக, தமிழக எல்லையான ஓசூர், மூக்கண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம் நோக்கி, விவசாயிகள் நடைபயணம் புறப்பட்டனர்.
தமிழக அரசு, காவிரி நீரை பெற்று தராமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை எடுத்துக் காட்டும் வகையில், விவசாயிகள் அனைவரும் நெற்றியில் நாமம் போட்டு, தலையில் காலி மண்பானையுடன் பேரணி சென்றனர்.
ஓசூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் மண்பானைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.
சங்க மாநில தலைவர் வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், 15 பெண்கள் உட்பட 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!