கோவை கார் குண்டு வெடிப்பு இருவரை விசாரிக்க மனு
சென்னை:கோவை, உக்கடம் கோட்டை, ஈஸ்வரன் கோவில் அருகே, 2022, அக்., 23ல், கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின், 28, என்பவர் பலியானார்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள 14 பேரில், முகமது அசாருதீன் மற்றும் தாஹா நசீர் என்ற இருவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரனை விரைவில் நடக்க உள்ளது.
இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள 14 பேரில், முகமது அசாருதீன் மற்றும் தாஹா நசீர் என்ற இருவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரனை விரைவில் நடக்க உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!