விமானத்தில் நெய் தேங்காயுடன் இருமுடி எடுத்து செல்ல அனுமதி
சென்னை:விமானத்தில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இரண்டு நெய் தேங்காயை இருமுடிக்குள் வைத்து எடுத்து செல்ல, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் செல்வதில் பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது.
கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம், அய்யப்ப பக்தர்கள் இருமுடிக்குள், இரண்டு நெய் தேங்காயை, 2024 ஜன., 15ம் தேதி வரை எடுத்து செல்ல சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அய்யப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யப்ப பக்தர்கள், இனி விமானத்தில் கொச்சி சென்று அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
அய்யப்ப பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி விமானத்தில் செல்வதில் பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது.
கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், நாடு முழுதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும், அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, இந்திய விமான நிலைய ஆணையம், அய்யப்ப பக்தர்கள் இருமுடிக்குள், இரண்டு நெய் தேங்காயை, 2024 ஜன., 15ம் தேதி வரை எடுத்து செல்ல சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அய்யப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யப்ப பக்தர்கள், இனி விமானத்தில் கொச்சி சென்று அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.
அய்யப்ப பக்தர்கள் வருகைக்கு ஏற்ப, சென்னை - கொச்சி இடையே விமான சேவை அதிகரிக்கப்படும் என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!