Load Image
Advertisement

தொடரும் மின் விபத்து 5 எருமைகள் உயிரிழப்பு

சோழவரம்:சோழவரம் அடுத்த பூதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா, 32. இவரது எருமை மாடுகள், நேற்று முன்தினம், பூதுார் கிராமத்தின் அருகில் உள்ள ஒரக்காடு சாலையில் மேய்ச்சலுக்கு சென்றன.

இரவு 7:00 மணிக்கு, பலத்த மழை பெய்தபோது, அங்கிருந்த மின் கம்பி அறுந்து, மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் மீது விழுந்துள்ளது.

இதில், ஐந்து எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன. தகவல் அறிந்த மின் வாரியத்தினர், உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்தனர். சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement