Load Image
Advertisement

காஞ்சியில் திருவிளக்கு பூஜை

 Thiruvilakku Pooja at Kanchi    காஞ்சியில் திருவிளக்கு பூஜை
ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதுகுல வேணுகோபால பஜனை கோவிலில், பம்பை பாலகன் பக்த ஜனசபா சார்பில், 37வது ஆண்டு கணபதி பூஜை, மலர் பூஜை விழா நேற்று நடந்தது.

இதில், காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையும், மாலை 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள், குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.

விநாயகர், துர்க்கை, மஹாலட்சுமி, சரஸ்வதி, அய்யப்பன் மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.

இரவு 7:00 மணிக்கு அய்யப்பனுக்கு மலர் பூஜையும், தர்மசாஸ்தா பஜனை சபா குழுவினரின் பஜனையும் நடந்தது. அதை தொடர்ந்து பகவான் பாண்டுரங்க குருசாமி ஜோதி தரிசனம் காண்பித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement