Load Image
Advertisement

கோ 32 புதிய சிறு தானியம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

பல்லடம்;பல்லடம் அருகே, கரடிவாவி கிராமத்தில், சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வேளாண் துறை சார்பில் நேற்று நடந்தது.

தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார வேளாண் அலுவலர் அஜித், உதவி வேளாண் அலுவலர் ரஞ்சித், 'அட்மா' திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசப்பன் பேசியதாவது:

நமது உணவில் அரிசி, கோதுமை உணவு வகைகளையே அதிகம் சேர்க்கிறோம். இதில், கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகம் கிடைக்கிறது. மனிதன் ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை, சிறுதானியங்களான, சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றிலேயே அதிகம் உள்ளன.

இந்த ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன்படி, கோ 32 ஏனும் புதிய ரக சிறுதானியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை நடவு செய்து அதிக பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, கோடை உழவு, விதை நேர்த்தி கூட்டமைப்பிய தொழு உரம், உயிர் உரம், ஊட்டச்சத்து, நுண்ணுாட்டசத்து, உயிரியல் பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement