Load Image
Advertisement

தபால் துறை ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர்;தபால்துறை ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் டிச., மாதம் நடக்கவுள்ளது. குறைகள், மனுக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என தபால்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் அறிக்கை:

கோவை மண்டலத்தின் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிச., மாதம் காணொலி காட்சி மூலம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதில், ஓய்வூதியர் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறிப்பட உள்ளது.

ஏதேனும் புகார், கோரிக்கை தொடர்பான மனு இருப்பின், 'ஓய்வூதியர்கள் குறைகேட்பு நாள் மனு, தபால் கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் - 641601' என்ற முகவரிக்கு வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement