Load Image
Advertisement

ரூ. 2.38 கோடியில் சாலை பணி 40வது வார்டு மக்கள் நிம்மதி

திருப்பூர்:மாநகராட்சி, 40வது வார்டு பகுதியில் 2.38 கோடி ரூபாய் செலவில் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜையுடன் துவங்கியது.

திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டு, கே.என்.எஸ்., நகர், காமாட்சியம்மன் நகர் பிரதான ரோடு மற்றும் குறுக்கு வீதிகளில் புதிய ரோடு அமைத்தல் மற்றும் ரோடு சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக, 'பயன்பாட்டில் இல்லாத கணக்கு மற்றும் வட்டி நிதி' (டி.ஏ.ஐ.எப்.) 2023-24 திட்டத்தில் 1.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

இதேபோல், தனலட்சுமி நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 87 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரோடு அமைத்தல் மற்றும் ரோடு சீரமைப்பு பணி செய்யப்படவுள்ளது. இப்பணிகளுக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.

தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பணிகளை துவக்கி வைத்தனர். துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், உதவி செயற்பொறியாளர் வாசுகுமார், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement