ADVERTISEMENT
மாநகராட்சி கவனத்துக்கு...
கோவில்வழி மாநகராட்சி நகர் நல மையத்தில், செவ்வாய்க் கிழமை கர்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் பலரும் வந்து வரிசையில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். வாரத்தின் இரு நாள் டாக்டர் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
- கோபால், கோவில்வழி.
குப்பை அள்ளுங்க...
திருமுருகன்பூண்டி - பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- விஜய்ஆனந்த், பூலுவப்பட்டி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், மணியகாரம்பாளையம் ரிங்ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் வழிந்தோடுகிறது. சாலை சேதமாகும் முன், உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- விநாயகம், மணியாரம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - அணைக்காடு சந்திப்பு சாலையில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர் செய்ய வேண்டும்.
- சுவாமிநாதன், அணைக்காடு. (படம் உண்டு)
குழியை மூடுங்க...
திருப்பூர், 56வது வார்டு, செரங்காடு, மசூதி வீதியில் நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
- முருகன், செரங்காடு. (படம் உண்டு)
சாலை சீரமைக்கலாமே!
திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி., ஸ்கூல் ரோட்டில், தார் பெயர்ந்து, ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலை அமைக்க வேண்டும்.
- தேன்மலர், அங்கேரிபாளையம்.
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் சாலை சேதமாகியுள்ளது. வேகமாக வருவோர் தடுமாறி, செல்கின்றனர். சிலர் விழுந்து விடுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)
திருப்பூர், 15 வேலம்பாளையம் - அனுப்பர்பாளையம் மின்மயான சாலை, பெஸ்ட் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வெளியாகி, சாலை சேதமாகியுள்ளது. சீரமைக்க வேண்டும்.
- வேல்ராஜ், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)
தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி, ஐந்தாவது வீதியில், 15 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- உமாசங்கர், பிரிட்ஜ்வே காலனி. (படம் உண்டு)
மங்கலம், மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள மூன்று தெருவிளக்குகளும் எரிவதில்லை. வீதி முழுதும் இருள் சூழந்து காணப்படுகிறது.
- புவனா, மங்கலம்.
ரியாக் ஷன்
ஜல்லி கொட்டுறாங்க...
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் ஸ்டாப்பில், சாலை சேதமாகியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. ஜல்லி கொட்டி, சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- தட்சணாமூர்த்தி, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
சுத்தமானது கால்வாய்
திருப்பூர், பெரிச்சிபாளையம், அம்மணியம்மாள் லே-அவுட் இரண்டாவது வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருந்தது. செய்தி வெளியான பின், கால்வாயை சுத்தம் செய்து விட்டனர்.
- மணி, அம்மணியம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
கோவில்வழி மாநகராட்சி நகர் நல மையத்தில், செவ்வாய்க் கிழமை கர்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் பலரும் வந்து வரிசையில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். வாரத்தின் இரு நாள் டாக்டர் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
- கோபால், கோவில்வழி.
குப்பை அள்ளுங்க...
திருமுருகன்பூண்டி - பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- விஜய்ஆனந்த், பூலுவப்பட்டி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், மணியகாரம்பாளையம் ரிங்ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் வழிந்தோடுகிறது. சாலை சேதமாகும் முன், உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- விநாயகம், மணியாரம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - அணைக்காடு சந்திப்பு சாலையில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர் செய்ய வேண்டும்.
- சுவாமிநாதன், அணைக்காடு. (படம் உண்டு)
குழியை மூடுங்க...
திருப்பூர், 56வது வார்டு, செரங்காடு, மசூதி வீதியில் நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
- முருகன், செரங்காடு. (படம் உண்டு)
சாலை சீரமைக்கலாமே!
திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி., ஸ்கூல் ரோட்டில், தார் பெயர்ந்து, ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலை அமைக்க வேண்டும்.
- தேன்மலர், அங்கேரிபாளையம்.
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் சாலை சேதமாகியுள்ளது. வேகமாக வருவோர் தடுமாறி, செல்கின்றனர். சிலர் விழுந்து விடுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)
திருப்பூர், 15 வேலம்பாளையம் - அனுப்பர்பாளையம் மின்மயான சாலை, பெஸ்ட் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வெளியாகி, சாலை சேதமாகியுள்ளது. சீரமைக்க வேண்டும்.
- வேல்ராஜ், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)
தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி, ஐந்தாவது வீதியில், 15 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- உமாசங்கர், பிரிட்ஜ்வே காலனி. (படம் உண்டு)
மங்கலம், மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள மூன்று தெருவிளக்குகளும் எரிவதில்லை. வீதி முழுதும் இருள் சூழந்து காணப்படுகிறது.
- புவனா, மங்கலம்.
ரியாக் ஷன்
ஜல்லி கொட்டுறாங்க...
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் ஸ்டாப்பில், சாலை சேதமாகியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. ஜல்லி கொட்டி, சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- தட்சணாமூர்த்தி, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
சுத்தமானது கால்வாய்
திருப்பூர், பெரிச்சிபாளையம், அம்மணியம்மாள் லே-அவுட் இரண்டாவது வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருந்தது. செய்தி வெளியான பின், கால்வாயை சுத்தம் செய்து விட்டனர்.
- மணி, அம்மணியம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!