Load Image
Advertisement

பெண் பலாத்கார முயற்சி 2 பேர் சிறையிலடைப்பு

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்டில், பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை, திருச்சி ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, 65 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு படுத்திருந்தார்.

அவ்வழியாக வந்த இருவர், அப்பெண்ணின் வாயில் மது ஊற்றிவிட்டு, அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மரியதைரியம் மகன் அந்தோணிமுத்து, 58 மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த ஜகதளன் மகன் வினோத் 22 இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, பல்லடம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement