பதிவு முடிந்த பத்திரங்கள் கிடைப்பதில் அலைக்கழிப்பு
சென்னை:சார் - பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு முடிந்த நிலையில், அதுகுறித்த மொபைல் போன் தகவல் வந்த பின்னும், பத்திரம் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த பத்திரங்களை, அடுத்த சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்களுக்குள் உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக தினசரி பதிவாகும் பத்திரங்கள் எண்ணிக்கை, அதில் பணி முடித்து திருப்பி தரப்பட்ட எண்ணிக்கையை பதிவுத்துறை கண்காணிக்கிறது, மாவட்ட பதிவாளர்கள் இதை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் கட்டட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்று பதிவுத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை பெரும்பாலான சார் - பதிவாளர்கள் மதிப்பதில்லை.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், பல சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'பதிவு முடிந்து விட்டது; நேரில் வந்து பத்திரத்தை வாங்கிச் செல்லுங்கள்...' என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் வருகிறது.
இதையடுத்து அவர்கள் சென்றால், 'கட்டட கள ஆய்வு இன்னும் முடியவில்லை...' என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
கட்டட கள ஆய்வு பணி நிலுவையில் இருக்கும் போது, விண்ணப்பதாரருக்கு மொபைல் போன் தகவல் வந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
ரியல் எஸ்டேட்
சொத்து மதிப்பீட்டாளர்
- பி.பாலமுருகன்,
தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த பத்திரங்களை, அடுத்த சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்களுக்குள் உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக தினசரி பதிவாகும் பத்திரங்கள் எண்ணிக்கை, அதில் பணி முடித்து திருப்பி தரப்பட்ட எண்ணிக்கையை பதிவுத்துறை கண்காணிக்கிறது, மாவட்ட பதிவாளர்கள் இதை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் கட்டட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்று பதிவுத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை பெரும்பாலான சார் - பதிவாளர்கள் மதிப்பதில்லை.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், பல சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'பதிவு முடிந்து விட்டது; நேரில் வந்து பத்திரத்தை வாங்கிச் செல்லுங்கள்...' என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் வருகிறது.
இதையடுத்து அவர்கள் சென்றால், 'கட்டட கள ஆய்வு இன்னும் முடியவில்லை...' என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
கட்டட கள ஆய்வு பணி நிலுவையில் இருக்கும் போது, விண்ணப்பதாரருக்கு மொபைல் போன் தகவல் வந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
ரியல் எஸ்டேட்
சொத்து மதிப்பீட்டாளர்
- பி.பாலமுருகன்,
செய்கின்றனர்
சார் - பதிவாளர் அலுவலகங்களில் உரிய, 'கவனிப்பு' இன்றி பத்திரங்கள் பதிவாவது இல்லை. கட்டட கள ஆய்வு என்ற விஷயத்தை காரணமாக கூறி, சார் - பதிவாளர்கள் மக்களை அலைக்கழிக்கின்றனர்.அனைத்து விஷயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே, ஒரு பத்திரம் பதிவு செய்யப்படும். கட்டட கள ஆய்வு தொடர்பாக பெரிய வேறுபாடு இருந்தால் சார் - பதிவாளர் சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கான தொகையை வசூலிக்க வழிவகை உள்ளது. ஆனால், சார் - பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கின்றனர். இந்த விஷயத்தில் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!