ADVERTISEMENT
பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளை உடைத்து, எண்ணெய்யை ருசித்து வரும் கரடியை பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் உப்பட்டி, பெருங்கரை, அத்திக்குன்னா, கூவமூலா, நெல்லியாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த, 2 மாதங்களாக கரடிகள் உலா வருகின்றன.
இவைகள், கடைகள் மற்றும் குடியிருப்புகளின் சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே சென்று எண்ணெய்யை ருசித்து வருகின்றன. இப்பகுதியில் கூண்டு வைத்தும் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அத்திக்குன்னா மட்டத்துபாடி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, எண்ணெய்; மிட்டாய் ஆகியவற்றை ருசித்து சென்றுள்ளது.
தகவலறிந்த வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனக்காவலர் பிரபு மற்றும் வனக்குழுவினர் கடையில் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு தொடர்கிறது.
பந்தலுார் உப்பட்டி, பெருங்கரை, அத்திக்குன்னா, கூவமூலா, நெல்லியாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த, 2 மாதங்களாக கரடிகள் உலா வருகின்றன.
இவைகள், கடைகள் மற்றும் குடியிருப்புகளின் சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே சென்று எண்ணெய்யை ருசித்து வருகின்றன. இப்பகுதியில் கூண்டு வைத்தும் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அத்திக்குன்னா மட்டத்துபாடி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி, எண்ணெய்; மிட்டாய் ஆகியவற்றை ருசித்து சென்றுள்ளது.
தகவலறிந்த வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனக்காவலர் பிரபு மற்றும் வனக்குழுவினர் கடையில் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு தொடர்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!