Load Image
Advertisement

சாய்பாபா பிறந்த நாள் சிறப்பு பாராயணம்

உடுமலை;உடுமலை டிவிபட்டினத்தில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு பாராயணம் நடந்தது.

உடுமலை டிவிபட்டினம் சத்யசாய் ஆன்மிக மையத்தில், ஸ்ரீ சத்யசாய் பிறந்தநாள் விழா, நாளை வரை கொண்டாடப்படுகிறது.

முதல் நாளில் நகர சங்கீர்த்தனம், சாய் பஜன் மற்றும் திருவிளக்கு பூஜையும் மாலையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, பாலவிகாஷ் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

மறுநாள் மகா கணபதி ேஹாமம் நடந்தது. நேற்று காலையில், தபோவன பாராயணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாய்பஜன் பாடி வழிபட்டனர்.

இன்று மாலை பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை காலையில் நகர சங்கீர்த்தனம், சத்யசாய் சகஸ்ர நாம பாராயணம், மதியம் நாராயண சேவை, மாலையில் சாய்பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement