ADVERTISEMENT
ஆனைமலை;ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, வரத்தும் அதிகரித்து, விற்பனை விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 152 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 78.55 ரூபாய் முதல், 88.50 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 286 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 32 முதல், 72.55 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 432 கொப்பரை மூட்டைகளை, 68 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தை விட, 165 மூட்டைகள்அதிகரித்து காணப்பட்டன; கிலோவுக்கு, ஒரு ரூபாய், 61 பைசா விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த வாரம், 14.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 197.10 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.
முதல் தர கொப்பரை, 152 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 78.55 ரூபாய் முதல், 88.50 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 286 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 32 முதல், 72.55 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 432 கொப்பரை மூட்டைகளை, 68 விவசாயிகள் கொண்டு வந்தனர். எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தை விட, 165 மூட்டைகள்அதிகரித்து காணப்பட்டன; கிலோவுக்கு, ஒரு ரூபாய், 61 பைசா விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த வாரம், 14.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 197.10 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!