Load Image
Advertisement

மேல்மருவத்துாரில் விபத்து வேனில் வந்த வாலிபர் பலி

மேல்மருவத்துார்:திருப்பூர் மாவட்டம், வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பூபதிராஜா, 24, என்பவர், மகேந்திரா தோஸ்த் வாகனத்தில், சென்னையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, சென்னை அடுத்த மாதவரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 38, என்பவர், ஆவின் பால் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, மேல்மருவத்துார் அடுத்த பாலாஜி பவன் ஹோட்டல் அருகே, ஆவின் பால் வண்டியை எந்தவித எச்சரிக்கை செய்கையும் இல்லாமல், திடீரென சாலையில் நிறுத்தியுள்ளார்.

பின் வந்த மகேந்திரா தோஸ்த் வாகனம், மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மகேந்திரா வேனில் வந்த பூபதிராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement