Load Image
Advertisement

திருப்போரூர் - -தாம்பரம் ஏசி பஸ் இயக்கப்படுமா?

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், மாநகராட்சியாக விளங்குகிறது. அதேபோல், திருப்போரூர் ஆன்மிக தலமாக உள்ளது.

தாம்பரம் -- திருப்போரூர் இடையே, தென் மாவட்ட பேருந்துகள் நிறுத்தப்படும் பெருங்களத்துார் உள்ளது.

வண்டலுாரில் உயிரியல் பூங்கா, கொளப்பாக்கத்தில் போலீஸ் பயிற்சி மையம், மேலக்கோட்டையூரில் அரசு விளையாட்டு பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், திருப்போரூர்- - தாம்பரம் தடத்தில் தினமும் பயணிக்கின்றனர்.

இத்தடத்தில் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உட்பட முக்கிய இடங்கள் அனைத்தும், அந்தந்த பேருந்து நிறுத்தங்களை ஒட்டியே உள்ளன.

சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் கூட, அவற்றை தவிர்த்து, 80 சதவீதம் பேர் பேருந்துகளில் பயணிக்கின்றனர். எனினும், இத்தடத்தில் 'ஏசி' பேருந்து சேவை இல்லாததால், பயணியர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே, திருப்போரூர்- - தாம்பரம் இடையே, 'ஏசி' பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement