மக்கள் குறைதீர் கூட்டம் 448 மனுக்கள் ஏற்பு
திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 448 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 124, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலை வாய்ப்பு வேண்டி 49, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 94 மற்றும் இதர துறை 127 மனுக்களும் என மொத்தம் 448 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் -வளர்ச்சி, சுகபுத்ரா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 124, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலை வாய்ப்பு வேண்டி 49, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 94 மற்றும் இதர துறை 127 மனுக்களும் என மொத்தம் 448 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் -வளர்ச்சி, சுகபுத்ரா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!