ADVERTISEMENT
சென்னை : வருமான வரி செலுத்துவோர், தங்கள் நிதி பரிவர்த்தனைகளை ஆன்லைனில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்படி, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதில் முரண்பாடுகள் இருந்தால், வரி செலுத்துபவரின் ஆவணங்கள், 'சோர்ஸ்' என்ற மூல ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:
வருமான வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் கணக்கு விபரங்கள், இ - வெரிபிகேஷன் என்ற, ஆன்லைன் சரிபார்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை, 2021ல் அறிமுகமானது. வருமான வரித்துறையின், https://incometaxindia.gov.in/ என்ற இணையதளத்தில், வரி செலுத்துவோருக்கான இணைய பக்கத்தில், ஆண்டு கணக்கு விபரங்களுடன், நிதி பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.
தாங்கள் தாக்கல் செய்த கணக்கு விபரங்கள் மற்றும் வங்கி நிதி பரிவர்த்தனைகளை சரிபார்த்து கொள்ளவும்.
இதில் முரண்பாடுகள் இருந்தால், வரி செலுத்துபவரின் ஆவணங்கள், 'சோர்ஸ்' என்ற மூல ஆதாரங்களுடன் ஒப்பிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அளிக்கும் தரவுகளில் கூட இரட்டைப் பதிவுகள் DOUBLE ENTRY உள்ளன.🤔 வரிசெலுத்துபவர்கள் அவற்றை முன்பே கவனித்து பிறகு வருமானத்தை ஒப்பிடலாம்.