Load Image
Advertisement

புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்



பெங்களூரு: ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ்கள் தொடர்பாக, பி.எம்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும் வகையில், புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இன்று - நேற்று முதல், MF - 23E, MF - 25, MF - 27 எண் கொண்ட பஸ்கள், ஜாலஹள்ளி மெட்ரோ நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் போக்குவரத்தை துவங்கின.

MF - 23E எண் கொண்ட பஸ், எம்.எஸ்.பாளையா, சிக்கபானவாரா, கானிகரஹள்ளி வழியாக குனி அக்ரஹாரா வரை செல்லும்.

MF - 25 எண் கொண்ட பஸ், நாகசந்திரா, திப்பேனஹள்ளி வழியாக எட்டாவது மைலுக்கு செல்லும்.

MF - 27 எண் கொண்ட பஸ், பாகல்குன்டே, ஆச்சார்யா கல்லுாரி, ஆலுார் வழியாக மாகளிக்கு சென்றடையும். புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதால், ஐ.டி., நிறுவனம் உட்பட பல பகுதிகளில் பணியாற்றுவோருக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement