ADVERTISEMENT
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., முன்னிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் அ.தி.மு.க., வில் இணைந்தனர். அவர்களுக்கு அருணமொழிதேவன் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வரவேற்றார்.
அப்போது, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலர் ரவிச்சந்திரன். மாவட்ட பொருளாளர் அயயாசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!