Load Image
Advertisement

மலையாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா



நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோவில், 7 ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, 19ம் தேதி, காலை 9:00 மணிக்கு மகா ேஹாமத்துடன் விழா துவங்கியது. 11:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் உள்ளிட்ட அனைத்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement