Load Image
Advertisement

பைக் தீ வைத்து எரிப்பு போதை ஆசாமி கைது



பண்ருட்டி : பண்ருட்டி அருகே போதையில் பைக்கை தீ வைத்து எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம், பி.ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வினோத்குமார். கடந்த 19 ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டின் முன்பு யமஹா மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்,41; என்பவர், குடிபோதையில் வினோத்குமாரை திட்டி, பைக் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், பைக் எரிந்து சேதமானது.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement