Load Image
Advertisement

ஒரு மாதத்தில் உள்வாங்கிய சாலை

 Road covered in a month    ஒரு மாதத்தில் உள்வாங்கிய சாலை
ADVERTISEMENT


நெல்லிக்குப்பம். : நெல்லிக்குப்பத்தில் போடப்பட்ட ஒரு மாதத்திலேயே சாலை உள்வாங்கியது.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சரவணபுரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு புதியதாக தார்சாலை போடப்பட்டது. சாலை போடும் போதே பணி தரமாக நடக்கவில்லை என மக்கள் புகார் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று அந்த சாலை வழியாக சென்றபோது, சாலை உள்வாங்கி, லாரி ஒன்று சிக்கியது. லாரியை அப்புறப்படுத்தி, பள்ளத்தில் கிராவல் கொட்டி மூடினர்.

அதேபோல் 9 வது வார்டு பங்களா தெருவில் சிமண்ட் சாலை போடப்பட்டு ஒரு மாதத்துக்குள் ஜல்லி பெயர்ந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் இதுபோன்ற தவறுகள் நடப்பதுடன், மக்கள் பிரதிநிதிகளும் கண்டும் காணால் உள்ளதுதான் வேதனை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement