அறிவியல் ஆயிரம்:நடனமாடும் தாவரம்
அறிவியல் ஆயிரம்
நடனமாடும் தாவரம்
தாவரங்களில் பல வகை உண்டு. இதில் 'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 2 - 4 அடி உயரம் வளரும். இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை. இச்செடியில் உள்ள சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசையிலும் நகர்கிறது. இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது. இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன. இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.
தகவல் சுரங்கம்
புற்றுநோய் பாதித்தவருக்கு ஆறுதல்
உலகில் புற்றுநோய் நோயாளிகளுக்கு தைரியம், நம்பிக்கை அளிக்கும் விதமாக செப்., 22ல் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் அவர்களுக்கு 'ரோஸ்' வழங்கி மகிழ்விக்கலாம். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடாவின் 12 வயது மெலின்டா ரோஸ், சில வாரங்களே வாழ்வார் என டாக்டர்கள் தெரிவித்த நிலையில் 6 மாதம் வாழ்ந்தார். இக்காலத்தில் அவர் மற்ற நோயாளிகள் உட்பட பலருக்கு கவிதை, கடிதம் எழுதி நம்பிக்கை ஏற்படுத்தினார். நோயாளிகளுக்கு சில நேரங்கள் ஒதுக்கி மகிழ்விக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
நடனமாடும் தாவரம்
தாவரங்களில் பல வகை உண்டு. இதில் 'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 2 - 4 அடி உயரம் வளரும். இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை. இச்செடியில் உள்ள சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசையிலும் நகர்கிறது. இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது. இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன. இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.
தகவல் சுரங்கம்
புற்றுநோய் பாதித்தவருக்கு ஆறுதல்
உலகில் புற்றுநோய் நோயாளிகளுக்கு தைரியம், நம்பிக்கை அளிக்கும் விதமாக செப்., 22ல் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் அவர்களுக்கு 'ரோஸ்' வழங்கி மகிழ்விக்கலாம். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடாவின் 12 வயது மெலின்டா ரோஸ், சில வாரங்களே வாழ்வார் என டாக்டர்கள் தெரிவித்த நிலையில் 6 மாதம் வாழ்ந்தார். இக்காலத்தில் அவர் மற்ற நோயாளிகள் உட்பட பலருக்கு கவிதை, கடிதம் எழுதி நம்பிக்கை ஏற்படுத்தினார். நோயாளிகளுக்கு சில நேரங்கள் ஒதுக்கி மகிழ்விக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!