Load Image
Advertisement

சிவகங்கையில் ரயில் நிற்க 10 இடங்களில் மறியல்



சிவகங்கை : மாவட்ட தலைநகர் சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி செப்.23ல் கடையடைப்பு 10 இடங்களில் நடக்கிறது. 2000 பேர் ரயில் மறியல் செய்வதாக முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கையில் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அறையில் நடந்தது. நகர தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். துணை தலைவர் கார்க்கண்ணன் கவுன்சிலர் ஜெயகாந்தன், சண்முகராஜன், இந்திய கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், உள்ளிட்ட 21 தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள், ஜமாத் தலைவர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொது நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நிற்ககோரி செப்.23ல் 10 இடங்களில் ரயில்மறியல் போராட்டம் நடத்துவது, கோரிக்கை நிறைவேறும் வரை ரயிலை சிறைபிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement