இலவச சைக்கிள் வழங்கும் விழா
திருவாடானை, : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கருமாணிக்கம் இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
காங்., வட்டாரத் தலைவர்கள் கணேசன், தட்சிணாமூர்த்தி, காங்., மாவட்ட செயலாளர் மனோகரன், திருவாடானை நகர தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!