நெல் விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் லாபம் ஈட்டலாம்
ராமநாதபுரம் : நெல் விதைப்பண்ணை அமைத்து லாபம் ஈட்ட ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் துவங்க விவசாயிகளுக்கு தேவையான விதைகளை உற்பத்தி நடக்கிறது. போதிய அளவு இருப்பும் உள்ளது. தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 86 கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த கிராமங்களில் நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான விதை, ஆதார விலை நெல் விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
கோ 51, ஏ.டி.டி., 45, ஆர்.என்.ஆர் 15048 போன்ற குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்யலாம். விற்பனை ரசீது மற்றும் சான்று அட்டைகள் ஆகியவற்றை விதைப்பு அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் மூலம் விதைப்பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும்.
நெல் விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கட்டணம் 25 ரூபாயும், வயலாய்வுக் கட்டணமாக 100 ரூபாயும், விதைப்பரிசோதனை கட்டணமாக 80 ரூபாயும் செலுத்தி நெல் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறலாம், என அவர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!