Load Image
Advertisement

வடமாடு மஞ்சுவிரட்டு

 Vadamadu Manchuviratu     வடமாடு மஞ்சுவிரட்டு
ADVERTISEMENT


முதுகுளத்தூர் : -முதுகுளத்தூர் அருகே கொண்டுலாவி கிராமத்தில் முனீஸ்வரன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உட்பட மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் கலந்து கொண்டன.

ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமத்தின் சார்பில் குத்து விளக்கு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

ஒரு சில வீரர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.

போட்டியில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொண்டுலாவி கிராம மக்கள் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement