ADVERTISEMENT
உத்தரகோசமங்கை : -உத்தரகோசமங்கையில் வளர்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
மூலவர் அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள ஏராளமான அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.அன்னதானம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!