அ.தி.மு.க., நிர்வாகிக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
விருதுநகர் : விருதுநகர் கோட்டூரில் செப். 17 இரவில் அ.தி.மு.க., நிர்வாகி தர்மலிங்கத்திற்கு கத்திகுத்து, அதை தொடர்ந்து செந்நெல்குடியில் தர்மலிங்கத்தின் டிரைவர் மகேஷ் கண்ணனை அரிவாளால் வெட்டினர்.
இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய கவுன்சிலர் மாரியப்பன் உட்பட 10 பேரை டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
இதில் நேற்று கவுன்சிலர் மாரியப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!