பலாத்காரம் செய்ய முயன்றவர் தப்பி ஓட்டம்
மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான அருவிக் காடு எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் ரஞ்ஜித் 24. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி பலமாக கூச்சலிட்டதால் ரஞ்ஜித் தப்பி ஓடி விட்டார். வெளியில் சென்றிருந்த பாட்டி வீட்டிற்கு வந்து சிறுமியை மீட்டார். தேவிகுளம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்ஜித் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாக தெரிய வந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!