Load Image
Advertisement

கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

 Tourists evacuated due to flooding in Kumbakarai    கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
ADVERTISEMENT
பெரியகுளம்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி போன்றவற்றில் சில நாட்களாக பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.

நேற்று காலை 8:00 மணி முதல் கும்பக்கரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்த நிலையிலும், நேற்றும் நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அருவி பகுதியில் குளித்தனர்.

நேற்று மதியம் 3:00 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவானதை அறிந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற அறிவுறுத்தினர். மாலை 4:00 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வனத்துறை ரேஞ்சர் டேவிட் ராஜா கூறுகையில்,''அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரைமறு தேதி குறிப்பிடாமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement