Load Image
Advertisement

விழிப்புணர்வு பேரணி: திரளானோர் பங்கேற்பு

ஊட்டி;ஊட்டியில் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் துவங்கிய பேரணியை, கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணியில், ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 50 வளர் இளம் பெண்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் தேவகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement